கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.36. உயிர் மோனை
(இணைக்குறள் ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் துடனே
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
முதலாம் எழுத்தாய் வருகிற எழுத்தில்
ஒத்த குறிலொலி என்றோ
ஒத்த நெடிலொலி என்றோ
ஒத்த உயிரொலி ஒன்றுவ(து) உயிர்மோனை.
உயிர்மோனை இலக்கியச் சான்றுகள்
அடிமோனை
(அ-ப -> ஒத்த குறிலொலி)
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
---திருக்குறள் 001:1
(மோ-நோ -> ஒத்த நெடிலொலி)
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
---திருக்குறள் 009:10
உயிர்மோனை இலக்கியச் சான்றுகள்: திருக்குறள்
சீர்நிலை உயிர்மோனை
அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் (இணை: அ-வ)
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் (பொழிப்பு: க-ப)
அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கள் (ஒரூஉ: அ-த)
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க (கூழை: வ-ம-ப)
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் (மேற்கதுவாய்: த-ந-ப)
கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச (கீழ்க்கதுவாய்: கெ-னெ-னெ)
தந்தை மகற்காற்று நன்றி யவையத்து (முற்று: த-ம-ந-ய)
யாகாவா ராயினு நாகாக்க காவாக்கால் (முற்று: யா-ரா-நா-கா)
உயிர்மோனை புனைவுச் சான்றுகள்
அடிநிலை உயிர்மோனை
(ஒத்த குறிலொலி: அ-த)
அங்கு மிங்கு மெங்கு நோக்கத்
தங்கமாய் மின்னும் சூரிய வொளியே!
(ஒத்த நெடிலொலி: கா-யா)
கார்காலப் போதில் மழைபெய்து நிற்க
யார்யாரோ தெருவில் நடைபயிலக் கண்டேன்.
உயிர்மோனை புனைவுச் சான்றுகள்
சீர்நிலை உயிர்மோனை
இணை (ப-ந, ம-ல)
பண்ணை நகராது கேட்கும் நாயைக்
மண்ணி லமர்ந்தே பார்த்தது குழந்தை.
பொழிப்பு (ம-த, எ-பெ)
மண்ணைத் தோண்டத் தண்ணீர் பெருகும்
எண்ணம் தோண்டப் பெருகு மாசை.
ஒரூஉ (ம-த, எ-பெ)
மண்ணைத் தோண்டப் பெருகுந் தண்ணீர்
எண்ணந் தோண்ட வாசை பெருகும்.
கூழை (பொ-கொ-யொ, மெ-தெ-தெ)
பொய்யைக் கொள்வதை யொழித்தென் மனமே
மெய்யைத் தெரிவ தென்னா ளறியேன்.
மேற்கதுவாய் (பொ-கொ-யொ, மெ-தெ-லெ)
பொய்யென் மனமே, கொள்வதை யொழித்து
மெய்யை யறிந்து தெளித லெளிதோ?
கீழ்க்கதுவாய் (பொ-கொ-யொ, மெ-வெ-தெ)
பொய்யைக் கொள்வதென் மனமே யொழித்து
மெய்யெது வென்றே அறிந்து தெளிவாய்.
முற்று (க-வ-ம-ந, எ-தெ-தெ-வெ)
கண்முன் வளரும் மரத்தின் நலன்கள்
எண்ணத் தெரியா தெளிதாய் வெட்டினர்.
8.37. நெடில் மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் துடனே
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
முதலாம் எழுத்தாய் வருகிற எழுத்தில்
ஏதேனும் நெடிலொலி ஒன்றுவ(து) நெடில்மோனை.
நெடில்மோனை இலக்கியச் சான்றுகள்: திருக்குறள்
அடிமோனை (கோ-றா)
கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.
---திருக்குறள் 001:9
நெடில்மோனை இலக்கியச் சான்றுகள்: திருக்குறள்
சீர்நிலை நெடில்மோனை
ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன் (இணை: ஊ-கௌ)
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை (பொழிப்பு: ஆ-கே)
ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை (ஒரூஉ: ஈ-றா)
கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியை (கூழை: கோ-சூ-கா)
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைப் (மேற்கதுவாய்: ஆ-தா-கே)
ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள் (கீழ்க்கதுவாய்: ஆ-றோ-கை)
யாதனின் யாதனி னீங்கியா னோத (முற்று: யா-யா-னீ-னோ)
நெடில்மோனை புனைவுச் சான்றுகள்
அடிமோனை (தோ-கே)
தோளி லேறிய சுமையைக் கந்தன்
கேளாம லிறக்கித் தன்வழி சென்றான்.
நெடில்மோனை புனைவுச் சான்றுகள்
சீர்நிலை நெடில்மோனை
இணை (வா-சூ, கா-லோ)
வானத்திற் சூரியன் நிறமாலை கொஞ்சும்
கானத்தி லோர்பசு நிழல்கண்டு தஞ்சம்.
பொழிப்பு (கா-மோ, ஊ-தே)
காண்பதெலாம் பொய்யென மோனத்தில் விளங்கும்
ஊண்விடுத்த மனத்தினிலே தேன்சிந்தும் களிப்பு.
ஒரூஉ (கா-மோ, ஊ-தே)
காண்பதெலாம் பொய்யென விளங்கும் மோனத்தில்
ஊண்விடுத்த மனத்தினிலே களிப்புத் தேன்சிந்தும்.
கூழை (நீ-வா-கோ, மா, வீ, லே)
நீல வானக் கோலக் கொண்டல்
மாலை வீழலி லேறுஞ் செம்மை.
மேற்கதுவாய் (கா-மோ-மூ, ஈ-கா-னூ)
காதலி லுண்டு மோதலு மூடலும்
ஈதலு மிசைதலும் காதலி னூடே.
கீழ்க்கதுவாய் (நீ-வா-கோ, மா, வீ, லே)
நீல வானக் கொண்டல் கோலம்
மாலை வீழலிற் செம்மை யேறும்.
முற்று மோனை (கா-கே-கோ-மூ, பே-ஊ-யோ-யா)
காணாமல் கேளாமல் கோள்சொல்லும் மூடர்
பேணாதே ஊக்கமா யோங்குகளை யாவர்.
*****
No comments:
Post a Comment