11.05 நாள் மலர் காசு பிறப்பு சான்றுச் சொற்கள் (வெண்பா) (குறள் வெண்பா) கீழ்வரும் சொற்சான்று நோக்கத் தெரியுமே நாள்மலர் காசு பிறப்பு. ... 1 க-கல்-கா-கால் சொற்களில் நேர்தனி வந்திட நாளெனும் வாய்பாடா கும். ... 2 (சிந்தியல் வெண்பா) கட-கடல் மற்றும் கடா-கடாம் சொற்கள் நிரைதனி வந்து மலரெனும் வாய்பாடால் ஆவது என்று உணர். ... 3 படுஎனும் சொல்லில் தனிநிரை யாம்மலர் பட்டு எனும்போது குற்றுகரம் சேர்வதால் நேர்பெனும் காசா வது. ... 4 தகாஎனும் சொல்லில் தனிநிரை காண தகாது எனும்சொல்லில் குற்றுகரம் சேர்வதால் ஆகும் நிரைபு பிறப்பு. ... 5 (குறள் வெண்பா) சிறுபான்மை முற்றுகரம் கூட வருவதுண்டு சொல்லு, கதவு என. ... 6 (பஃறொடை வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்களாம் கூம்பு-சாய்த்து ஆடு-பாரு தந்து-நில்லு அஞ்சு-நீர்க்கு சொற்களைச் சேர்க்கும் கழித்தல் குறிநீக்க எல்லாமே நேர்பெனும் காசு. ... 7 வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்கள் முடங்கு குவவு விரைந்து அலங்கு பலவு இரவு உறாது இராது அனைத்தும் நிரைபு பிறப்பு. ... 8 ***** 11.06 நாள் மலர் காசு பிறப்பு திருக்குறள் சான்றுகள் (குறள் வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் வள்ளுவரின் சான்று சில. ... 1 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். ... [நாள்] வெண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. ... [மலர்] இருள்சேற் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ... [காசு] அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. ... [பிறப்பு] ***** 11.07 நாள் மலர் காசு பிறப்பு: அனைத்துவகைச் சான்றுகள் (வெண்பா) (சிந்தியல் வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்ப் பைந்தமிழ்ச் சான்றுகள் பார்க்கும் பொழுது இறுதி இரண்டடிகள் இங்கு. (குறள் வெண்பா) நாள்மலர் காசு பிறப்பு அனைத்து வகைச்சான்றும் கீழே உள. கீழுள்ள சான்றுகள் ஔவையின் பாக்களே வேறி ரண்டு தவிர்த்து. முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக் குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு. [தனிக்குறில்: நேர்: நாள்] ---காளமேகப் புலவர் இஞ்சிக்குடி தாசி கலைச்சியை இகழ்ந்து பாடியது. இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல். [தனிக்குறிலொற்று: நேர்: நாள்] துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. [தனிநெடில்: நேர்: நாள்] தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். [தனிநெடிலொற்று: நேர்: நாள்] நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. [குறிலிணை: நிரை: மலர்] புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மேள் இட்ட கலம். [குறிலிணையொற்று: நிரை: மலர்] கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. [குறில்நெடில்: நிரை: மலர்] வன்னி கதிரவன் கூடிடி லத்தகை பின்னிவை யாகு மெலாம். [குறில்நெடிலொற்று: நிரை: மலர்] ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு. [தனிக்குறிலொற்று+உகரம்: நேர்பு: காசு -- தனிக்குறில்+உகரம் வரக்கூடாது.] உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. [தனிநெடில்+உகரம்: நேர்பு: காசு] கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு. [தனிநெடிலொற்று+உகரம்: நேர்பு: காசு] கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு. [குறிலிணை+உகரம்: நிரைபு: பிறப்பு] தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு. [குறிலிணையொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு] உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல் நிரையுள்ளே இன்னா வரைவு. [குறில்நெடில்+உகரம்: நிரைபு: பிறப்பு] ---பழமொழி நானூறு 68 நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து. [குறில்நெடிலொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு] *****
Wednesday, May 24, 2017
11.05 நாள் மலர் காசு பிறப்பு சான்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment